நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!  - Seithipunal
Seithipunal



கடந்த ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரம் பூதாகரமாக வெடித்தது.  

மணிப்பூர் இரு பெண்கள் குறித்து வெளியான வீடியோ தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்று இன்று மூன்றாவது நாளாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி சுமார் 4 மணி அளவில் பதிலளித்து பேசினார்.

1.30 மணிநேரம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த பிரதமர் மோடி, சரியாக மணிப்பூர் விவகாரம் குறித்து பேச தொடங்கியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no confidence motion lok sabha 2023


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->