ஒ.டி.டி மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு ஆப்பு!!! மத்திய அரசு புதிய சட்டம்!
New law by the central government for OTT and digital platforms
ஓடிடி மற்றும் டிஜிட்டல் தளங்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அவற்றை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள் ஏதும் இந்தியாவில் இல்லாத நிலையே உள்ளது. மேலும் ஆபாச பதிவுகள் மற்றும் வன்முறை சமூக வலைதளங்களில் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மிக அதிகமான விமர்சனங்கள் பெருகி வருகின்றன. இதைத்தொடர்ந்து, தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய தரப்புகளில் இருந்தும் விமர்சனங்கள் வெளியாகி வருகிறது.

புதிய சட்டங்களின் தேவை:
மேலும் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களிலும் இந்த விவாகாரம் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண, தற்போதுள்ள சட்டங்களில் சிலவற்றை மாற்றி அமைத்து அதன் தன்மை குறித்தும் புதிய சட்டங்களின் தேவையை ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் தேவைப்படும் மாற்றங்கள் குறித்த வரைவு அறிக்கை இதற்காக உள்ள குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
English Summary
New law by the central government for OTT and digital platforms