மே. வங்கம் : ரெயில் நிலையத்தில் நின்ற அதிகாரி மீது மின்கம்பி அறுந்து விழுந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள ஹாரக்பூர் ரெயில் நிலையத்தில் பயணசீட்டு பரிசோதகராக பணியாற்றி வருபவர் சுஜன் சிங் சர்தார். இவர், வழக்கம் போல் நேற்று ரெயில் நிலையத்தில் நின்று சக ஊழியருடன் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது, தண்டவாளத்திற்கு மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து பரிசோதகரின் தலை மீது விழுந்ததில், அவர் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. 

இதனால், அவர் அருகில் இருந்த தண்டவாளத்தில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர் அங்கிருந்து ஓடிவிட்டார். அதன் பின்னர் அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் சுஜனை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, ரெயில் நிலையத்தில் தண்டவாளத்திற்கு மேலே செல்லும் உயர் மின் அழுத்த கம்பி எவ்வாறு அறுந்து விழுந்தது என்பது குறித்து விசாரணை செய்வதற்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், சக ஊழியருடன் பேசிக்கொண்டிருந்த போது, பயணசீட்டு பரிசோதகர் மீது உயர் மின் அழுத்த கம்பி விழுவதும் அதனால், மின்சாரம் பாய்ந்து அவர் ரெயில் தண்டவாளத்தில் மயங்கி விழும் வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near west bengal electric wire falls down on railway officer head


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->