உ.பி : காரில் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர்கள் - சாலையில் ஆடையை கிழித்து வீசிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருர் திருமணம் நடைபெற்ற பின்னர் தன் கணவருடன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நாகா பகுதியில் வசித்து வந்தார். இந்தநிலையில் அந்த இளம்பெண் நேற்று முன்தினம் வெளியில் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 

இந்த நிலையில், நேற்று இரவு சாலையோரத்தில் காயங்களுடன் இளம்பெண் ஒருவர் கிடந்துள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, "இரண்டு இளைஞர்கள் அந்த இளம்பெண்ணைக் காரில் ஏற்றி அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். அதற்கு அந்த இளம்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இருப்பினும், அந்த இளைஞர்கள் அந்த இளம்பெண்ணின் ஆடைகளைக் கிழித்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு சாலையில் வீசி விட்டுச் சென்றுள்ளனர். படுகாயத்துடன் அவர் சாலை ஓரத்தில் கிடந்துள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இளம்பெண்ணை பாலியல் பலாத்தகாரம் செய்த அடையாளம் தெரியாத அந்த குற்றவாளிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றது தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh young man sexuall harassment to woman


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->