உ. பி : மனைவி கோபமாக இருப்பதாக கூறி விடுப்பு கேட்ட போலீசார் - வலைத்தளத்தில் வைரலாகும் கடிதம்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மஹராஜ்கஞ்ச் மாவட்டம் நவ்தன்வா காவல் நிலையத்தில் பணிபுரியும் துணை நிலை காவலர் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இவர் தற்போது மௌ மாவட்டத்தில் வசித்து வருகிறார். 

இந்த நிலையில், அவர் விடுப்பு வேண்டி விண்ணப்பம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "தனக்கு விடுமுறை கிடைக்காததால் கோபமான மனைவி, போன் செய்யும் போது தன்னுடன் பேசுவதில்லை.

 

பலமுறை அவருக்கு நான் போன் செய்தேன். ஆனால் அவர், தனது தாயிடம் போனை கொடுத்து விடுகிறார். இதையடுத்து தனது மருமகனின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வருவேன் என்று தனது மனைவிக்கு உறுதியளித்துள்ளேன். இருப்பினும், விடுமுறை கிடைக்கவில்லையென்றால் நான் வீட்டிற்கு செல்ல முடியாது என்று குறிப்பிட்டு விடுப்பு கேட்டுள்ளார். 

இதையடுத்து, இந்த விண்ணப்பத்தைப் படித்த உதவி கண்காணிப்பாளர், ஜனவரி 10 முதல் 5 நாட்களுக்கு அவருக்கு சாதாரண விடுப்பு வழங்கியுள்ளார். ஆனால் இந்த விடுப்பு காரணமாக எந்த விதமான இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் துணை நிலை காவலர் எழுதிய இந்த விடுப்பு விண்ணப்பம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh police constable wrote leave letter viral in social medias


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->