ஆபாசமாக ஆடை அணிந்த மனைவியை சரமாரியாக குத்திய கணவன் கைது.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோஹித் குமார்-சப்னா தம்பதியினர். இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், சப்னா ஆடை உடுத்துவது தொடர்பாக அவருக்கும் அவருடைய கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், நேற்றும் சப்னா தகாத முறையில் ஆடை அணிந்துள்ளார். இதனால், இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோஹித் குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சப்னாவை கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். 

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சப்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர், சப்னாவின் கணவர் மோஹித் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பொது இடங்களில் தகாத முறையில் ஆடை அணிய வேண்டாம் என்று பலமுறை எச்சரித்துள்ளேன். 

ஆனால், அவர் கேட்வில்லை. இதனால், ஆத்திரத்தில் நான் அவரை கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh man arrested for kill wife


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->