உத்தரபிரதேசம் || பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதல்.! 8 பேர் உயிரிழப்பு..!  - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தருஹெரா பகுதியில் இருந்து லக்னோ பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து, லக்கீம்பூர் கெரி பகுதியில், ஈரா பாலம் அருகே ஈசாநகர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடத்தில் வந்துக் கொண்டிருந்த போது, லாரி ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்து உள்ள நிலையில், இருபத்தைந்து பேர் காயமடைந்து உள்ளனர். இதுக் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று காயமடைந்த நபர்களை மீட்டு லக்னோ நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

இதுபற்றி அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று தேவையான உதவிகளை செய்ய வேண்டும், நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சைக்கு வேண்டிய முறையான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும்  என்றும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near utrapradesh bus lory accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->