உத்தரகாண்ட் || பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து.! 32 பேர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லால்தாங் பகுதியில் இருந்து பவுரி மாவட்டத்தில் உள்ள பிரோன்கால் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்தில், 50-க்கும் மேற்பட்டவர்கள் பிரோன்கால் பகுதியில் நடைபெறும் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக பயணம் செய்தனர்.

இந்நிலையில், பேருந்து மலைப்பாங்கான பகுதியில் இரவு 7.30 மணியளவில் சிம்ரி என்ற இடத்தில் உள்ள வளைவில் திரும்பும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் மக்கள், போலீசார் மற்றும் மீட்புப்பணியினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீட்புபணிகளை தூரிதப்படுத்தும் படி முதலமைச்சர் புஷ்கர் தாமி உத்தவிட்டுள்ளார். 

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பள்ளத்தாக்கில் இருந்து 21 பேரை மீட்புப்படையினர் மீட்டு காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near utrakant bus accident 32 people died


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->