கடன் பிரச்சனையால் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட கணவர்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் நகர் தாதர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத் சம்ஜிஸ்கர்-சுபாங்கி தம்பதியினர்.இவர்களுக்கு 17 வயதில் மகள் ஒருவர் உள்ளார். 

இந்நிலையில் நேற்று காலை சம்ஜிஸ்கர் மகள் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அவர் போனதும், சம்ஜிஸ்கர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு, அதன் பின்னர் தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து, நேற்று மதியம் சம்ஜிஷ்கரின் உறவினர்கள் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு, இருவரும் படுக்கையில் கிடப்பதை பார்த்து அவர்களை எழுப்பியுள்ளனர். ஆனால், இருவரும் எழாமல் இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அவர்களைத் திருப்பி பார்த்துள்ளனர். அப்போது இருவரும் இறந்துள்ளது தெரியவந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்ஜிஸ்கர் மற்றும் அவருடைய மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீசார் சம்ஜிஸ்கர் வீட்டில் சோதனை செய்ததில், தற்கொலைக் குறிப்பு ஒன்றை கைப்பற்றியுள்ளளனர். அந்த குறிப்பில், கடன் பிரச்சனையால், மனைவியைக் கொன்றுவிட்டதாகவும், தானும் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், அந்த பெண் எப்படி கொல்லப்பட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் கொலை மற்றும் தற்கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mumbai husband death after kill wife for loan problam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->