500 ரூபாயால் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்...!
near mumbai family problam young man died
மும்பையில் உள்ள பால்கர் மாவட்டத்தில் விரார் மேற்கு வீர்சாவர்க்கர் மார்க் லஷ்மி நிவாஸ் என்ற கட்டிடத்தில் வசித்து வந்தவர் ராம்ஜி சர்மா. இவர் மனைவி சாந்தினிதேவி. ராம்ஜி சர்மா பயந்தரில் உள்ள ஒரு துணி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மனைவியிடம் புதிதாக துணி வாங்குவதற்காக ரூ.2 ஆயிரம் கொடுத்திருந்தார்.
அதன்பின்னர் தான் கொடுத்த இரண்டாயிரத்திலிருந்து ரூ.500-ஐ கொடுக்குமாறும் அதனை சில நாட்கள் கழித்து திருப்பி தருவதாகவும் சாந்தினி தேவியிடம் தெரிவித்தார். ஆனால் சாந்தினி தேவி பணம் தருவதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து ராம்ஜி ரூ.500-ஐ திருப்பி தராவிட்டல் தான் தற்கொலை செய்து கொள்வதாக மனைவியை அச்சுறுத்தி உள்ளார். ஆனால், மனைவி சாந்தினி தேவி இதனை கண்டு கொள்ளாமல் இருந்தார்.
இதைத் தொடர்ந்து வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்ற ராம்ஜி சர்மா சேலையால் தூக்கு போடுவது போல நாடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் திடீரென அவரது கால் நழுவியதால் எதிர்பாராத விதமாக சேலை ராம்ஜி கழுத்தில் மாட்டிக்கொண்டது.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதைபார்த்த மனைவி சாந்தினி அருகில் இருப்பவர்கள் உதவியுடன் கதவை உடைத்து மீட்டார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை நடத்திய டாக்டர்கள் ராம்ஜி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near mumbai family problam young man died