மகாராஷ்டிரா : ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை மாவட்டத்தில் தலொஜா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்தக் குடியிருப்பில் உள்ள ஏசி பழுதடைந்து இருந்ததால் அதனை சரிசெய்வதற்கு 19 வயதுடைய ஏசி மெக்கானிக் ஒருவர் வந்திருந்தார். 

அங்கு ஏசியை சரி செய்யும் போது, அந்த குடியிருப்பு பகுதியில் ஐந்து வயது சிறுமி ஒருவர் தனியாக விளையாடிக்கொண்டிருந்தார். இதைக்கவனித்த ஏசி மெக்கானிக் அந்த சிறுமியை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த லிப்டிற்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

அதன் பின்னர், அந்த சிறுமி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு திடீரென அந்த சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்தபோது, அவர் தனக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிவித்தார். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் வேகமாக வெளியே ஓடி வந்து பார்த்த போது, அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஏசி மெக்கானிக் வேகமாக குடியிருப்பை விட்டு வெளியேற முயற்சி செய்தார்.

இதைப்பார்த்த சிறுமியின் தாய் குடியிருப்பின் காவலாளி உதவியுடன் அந்த வாலிபரை பிடித்துள்ளார். அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஏசி மெக்கானிக்கை கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near maharastra youn man arrested for sexuall harassment case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->