மும்பை : ஐ.ஐ.டி விடுதியில் மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகர் பொவாய் பகுதியில் மும்பை ஐ.ஐ.டி. அமைந்துள்ளது. இந்த ஐ.ஐ.டியில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் நகரை சேர்ந்த தர்சன் சொலாங்கி என்ற மாணவர் பி.டெக் இயந்திரவியல் பிரிவில் முதலாம் ஆண்டில் சேர்ந்து உள்ளார். 

விடுதியில் தங்கி படித்து வந்த இவர், ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த விடுதியின் பாதுகாவலர்கள், சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் அந்த மாணவர் தங்கியிருந்த விடுதி அறைக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியாததால், போலீசார் இதனை தற்செயலான மரணம் என்று வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் மாணவர் உயிரிழந்தது தொடர்பாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra iit student sucide in mumbai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->