மத்திய பிரதேசம் : கள்ளகாதலுடன் ஓடிய பெண்.! நடுரோட்டில் வெளுத்து வாங்கிய கணவர்.! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ராட்லம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரின் வீட்டை விட்டு கள்ளக்காதலனுடன் ஓடி அவருடன் சில காலம் வாழ்ந்து வந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கணவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை பல முறை வீட்டிற்கு வருமாறு அழைத்தபோதும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். அதன் பின்னர் அந்த பெண்ணின் கணவரும், அவருடைய குடும்பத்தினரும் அவர்கள் வசித்து வந்த வீட்டை காலி செய்து விட்டு வெளியூர் சென்றனர். 

இதையடுத்து, அந்தப்பெண் கணவரின் வீட்டுக்கு வந்து வசிக்கத்தொடங்கினர். இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அந்த பெண்ணின் கணவருக்கு தகவல் அளித்தனர். அதன் படி வீட்டிற்கு வந்த அவரின் கணவரும், சில ஆண்களும் சேர்ந்து, அந்த பெண்ணை நடுரோட்டில் கைகளை கட்டி, தடியால் அடித்து உதைத்தனர். 

பின்னர், சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு, அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பெண்ணின் கணவர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madhyapradesh husband attack wife for going to another person


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->