கேரளா : பரிகார பூஜை நடத்துவதாக கைவரிசையை காட்டிய பெண் மந்திரவாதி - தீவிர தேடலில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் வெள்ளயாணி பகுதியை சேர்ந்தவர் விஸ்வாம்பரன். இவருடைய குடும்பத்தில் சிலர் தொடர்ந்து அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

இதனால் மனமுடைந்த விஸ்வாம்பரன் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜோதிடரை நேரில் சென்று பார்த்தபோது, அவர் சில பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த பரிகார பூஜையை குமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை அருகே தெற்றியோடு தேவி என்று அழைக்கப்படும் வித்யா என்ற பெண் மந்திரவாதி நடத்துவார் என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து விஸ்வாம்பரன் கடந்த ஆண்டு களியக்காவிளை சென்று பெண் மந்திரவாதி வித்யாவை சந்தித்தபோது நான் நேரடியாக வீட்டுக்கு வந்து பரிகார பூஜை நடத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

அதன்படி, சில நாட்களுக்கு பிறகு விஸ்வாம்பரனின் வீட்டுக்கு வந்த வித்யா, கடுமையான சாப தோஷம் இருப்பதால் வீட்டில் வைத்து தொடர்ந்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என்றார். அதற்காக வீட்டில் உள்ள ஒரு அறை பூஜை அறையாக மாற்றப்பட்டு சுமார் ஒரு வாரத்திற்கு மேல் வித்யாவும், அவருடன் வந்தவர்களும் சேர்ந்து பூஜை நடத்தினர்.

ஒரு கட்டத்தில் சாபம் இன்னும் குறையவில்லை என்று கூறிய வித்யா, வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை வைத்து பூஜை நடத்த வேண்டும் என்றார். அதை உண்மை என்று நம்பிய விஸ்வாம்பரனின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த 55 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். அதனை பூஜை அறையில் உள்ள பீரோவில் வைத்து விட்டு செல்லும்படி வித்யா தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, பூஜையை முடித்த வித்யா இரண்டு வாரம் கழித்து தன்னிடம் தெரிவித்து விட்டு பீரோவை திறந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொள்ளும்படி தெரிவித்து அங்கிருந்து சென்றார். 

இதைத்தொடர்ந்து, இரண்டு வாரங்கள் கழிந்ததும் விஸ்வாம்பரன் வித்யாவை தொடர்புகொண்டு பீரோவை திறக்கலாமா? எனறு கேட்ட போது. தேவியின் சாபம் இன்னும் குறைவில்லை. மூன்று மாதம் கழித்து தான் பீரோவை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி மூன்று மாதம் கழித்து, பின்னர் வித்யாவை தொடர்புக் கொண்டு கேட்டபோது ஒரு வருடம் கழித்து திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் விஸ்வாம்பரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதனால், பூஜை அறைக்கு சென்று பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை. 

இதனால், அதிர்ச்சியடைந்த விஸ்வாம்பரன் உடனடியாக வித்யாவை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளார். அப்போது வித்யா இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தால் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என்று வித்யா மிரட்டியுள்ளார். 

இருப்பினும், மிரட்டலுக்கு பயப்படாத விஸ்வாம்பரன் இது குறித்து திருவனந்தபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் மந்திரவாதி வித்யா மற்றும் அவருடன் வந்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near kerala Female magician roberry in house


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->