மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேக்கரி கடைக்காரர்.!! ஆத்திரத்தில் தந்தை செய்த விபரீத செயல்.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி மாவட்டம் சேரநல்லூரில் கண்ணன் என்பவர் பேக்கரி ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்த பேக்கரிக்கு கடந்த புதன்கிழமை மாலை பதின்மூன்று வயது சிறுமி ஒருவர் இனிப்பு வாங்க வந்துள்ளார். 

அப்போது, அந்த சிறுமிக்கு கடையின் உரிமையாளர் கண்ணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறியடித்து ஓடிவந்த சிறுமி தனது தந்தையிடம் இந்த சம்பவம் குறித்து அனைத்தையும் தெரிவித்துள்ளார். 

இதைகேட்ட சிறுமியின் தந்தை பேக்கரி கடைக்கு விரைந்து சென்று கடையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், கடை முழுவதும் எரிந்து சேதமானது. அத்துடன் கடைக்குள் இருந்த கண்ணனின் மனைவிக்கும் காயம் ஏற்பட்டது. 

அதன் பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி கடை உரிமையாளர் கண்ணனை போலீசார் கைது செய்தனர். 

அதேநேரத்தில், பேக்கரி கடையை தீ வைத்து எரித்ததாக கண்ணனின் மனைவியும் புகார் அளித்துள்ளார். அதன் படி, சிறுமியின் தந்தையையும் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala bakary shop owner arrested for sexuall harassment case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->