பசியால் துடித்த 12 நாள் குழந்தை.! பால் கொடுத்து பசியாற்றிய பெண் காவலர்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் கோழிக்கூடு மாவட்டத்தில் பூலக்கடவு பதியைச் சேர்ந்த ஆஷிகா என்ற பெண், கடந்த 22ஆம் தேதி குடும்பத் தகராறின் காரணமாக தனது கணவர் ஆதில் மற்றும் அவரது தாய் இருவரும் சேர்ந்து தனது குழந்தையை கடத்திச் சென்றதாக சேவாயூர் போலீஸில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் கடத்தப்பட்ட குழந்தையுடன் ஆதில் மற்றும் அவரது தாயார் சுல்தான் பத்தேரி என்ற இடத்தில் இருப்பது  தெரியவந்தது. உடனே அந்த இடத்திற்கு பெண் போலீஸ் அதிகாரி ரம்யா உட்பட அதிகாரிகள் குழு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். 

இந்த கடத்தல் வழக்கில், குழந்தையின் தந்தை ஆதில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, நீண்ட நேரமாக பசியால் தவித்த குழந்தையின் உடல்நிலையில் சற்று ஏற்ற இறக்கம் காணப்பட்டதனால் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், குழந்தையின் உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதை மருத்துவர் கவனித்தார். அப்போது குழந்தை அழ ஆரம்பித்தது. 

இதை கவனித்த காவல் அதிகாரி ரம்யா, உடனே டாக்டரிடம் சென்று, நான் ஒரு வயது குழந்தைக்கு தாயாக உள்ளேன், இந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா என்றும் கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர் அனுமதித்ததனால் , ரம்யா அந்த குழந்தையை தனது சொந்த குழந்தையாக கருதி குழந்தைக்கு பாலூட்டினர். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ரம்யா தெரிவித்ததாவது, "இது தனது வாழ்நாளில் மறக்கமுடியாத தருணம் என்றும் இந்த நாள் தனது வாழ்க்கையில் மிகவும் அர்த்தமுள்ள நாள் என்றும் பசியால் இந்தக் குழந்தை அழுதபோதும் கூட என் குழந்தைபோல் நினைத்துதான் பால் கொடுத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala 12 days born child kidnap


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->