வீட்டிற்கு தாமதமாக வந்த கணவர்.! மனைவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு பாலாநகரை சேர்ந்தவர் ஹரீஷ். ஆட்டோ ஓட்டுனரான இவர், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அதேப்பகுதியை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

அதன் பின்னர் தனது வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக தொடங்கிய இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஹரீஷ் தனது மனைவி திவ்யாவுடன் பக்கத்து வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு சென்றிருந்தார். 

அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு திவ்யா மட்டும் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஆனால், நீண்ட நேரமாகியும் ஹரீஷ் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து, போன் செய்தாலும் அவர் எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திவ்யா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதைத்தொடர்ந்து, வீட்டுக்கு வந்த ஹரீஷ், மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த க்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு, திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக திவ்யாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரீசிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataga wife sucide for husband late come to house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->