கர்நாடகா : ஸ்ரீராம் சேனை அமைப்பு தலைவர் மீது துப்பாக்கிச்சூடு - மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம் ஹிண்டலகா கிராமத்தில் ஸ்ரீராம் சேனை அமைப்பின் தலைவர் ரவி கோகிடகேரா மற்றும் அவரது வாகன ஓட்டுனர் இருவரும் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் அவர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து தப்பித்து ஒட்டியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ரவியின் மற்றும் அவரது வாகன ஓட்டுனரும் படுகாயமடைந்துள்ளனர். 

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஓடிவந்து அவர்கள் இருவரையும் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karanataga sriram sena leader attack gun shoot


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->