அரசு அதிகாரி போல் நடித்து மோசடி செய்த 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. அதனைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் புழக்கத்திற்கு வந்தது. இந்த தடுப்பூசிகளை மாநிலங்கள் தோறும் எடுத்துச் செல்வதற்கான பணி உத்தரவு பல தனியார் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது. 

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடி கும்பல் ஒன்று அந்த பணியில் போலியாக செயல்பட்டது. இந்த மோசடி கும்பல் டெல்லியில் உள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அமைந்துள்ள நிர்மாண் பவனை தங்களுடைய அலுவலகமாகவே காண்பித்துக் கொண்டது. இதை உண்மை என்று நம்பி அந்த உத்தரவை பெறுவதற்காக பலர் ரூ.3 கோடி, ரூ.4 கோடி என்று பணம் கொடுத்துள்ளனர். 

இதுபோன்று பலரிடம் ரூ.15 கோடிக்கும் மேல் பணத்தை வாங்கிகொண்ட அவர்கள் போலியாக ஒரு உத்தரவை தயாரித்து அவர்களுக்கு வழங்கியது. அந்த உத்தரவு போலி என்று தெரிய வர, ஏமாந்தவர்கள் அந்த மோசடி நபர்களை தீவிரமாக தேடினார்கள். ஆனால் மோசடி நபர்கள் அவர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். 

இதையடுத்து அந்த மோசடி கும்பல் பெயரில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில் இந்த மோசடிக்கு உந்துகோலாக இருந்த ஹார்மென் சபெர்வால், கோவிந்த் துல்ஷ்யன், சுகாதார அதிகாரிகள் போன்று நடித்த வினோத்குமார் ஷர்மா, வினய்குமார் மற்றும் பிரபுல்லகுமார் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக உமேஷ் பத்ரா, போலீசார் தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகியுள்ளார். இருப்பினும் போலீசார் அவரை தொடர்ந்து தேடினார்கள். இந்நிலையில் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் சரண் அடைய வந்த அவரையும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near delhi six peoples arrested for mony fraud


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->