திருமணமான காதலியை மறக்க முடியாததால், வீடு புகுந்த காதலன்.! அறுத்தெறிந்த அண்ணன்.!
murder when boy attack his lover
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பரேலி என்ற மாவட்டத்தில் ஆஷிஷ் ஷர்மா என்பவர் தன்னுடைய முன்னாள் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் அவரை தாக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இதன் காரணமாக அந்த பெண்ணின் சகோதரர் காதலனை கொலை செய்து இருக்கின்றார்.
ஆஷிஷ் ஷர்மா ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். இருவருடைய காதலும் நிறைவேறாமல் சென்றுள்ளது. அவர் வேறு ஒரு பெண்ணையும், காதலி வேறொரு ஆணையும் திருமணம் செய்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், தன்னுடைய காதலியை மறக்க முடியாமல் சர்மா தவித்துள்ளார்.
இதன் காரணமாக காதலியை காண அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே காதலி தன்னுடைய அம்மா மற்றும் அண்ணன் உடன் இருந்துள்ளார். அந்த காதலியை பார்த்தவுடன் ஆத்திரத்தில் சர்மா அவரை தாக்கி வருகின்றார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த காதலியின் அண்ணன் அவரை தாக்க சர்மா உயிரிழந்து இருக்கின்றார். வீட்டிலிருந்த அனைவரும் சேர்ந்து அவரை தோட்டத்தில் புதைத்துவிட்டனர்.
கணவரை காணாததால் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் விஷயமானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் காதலியின் அண்ணன் மற்றும் அம்மா இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
murder when boy attack his lover