அதிகரிக்கும் உயிர் பலி! உடனடியாக தொடர்புகொண்ட தமிழக முதல்வர்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்யும் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவிலும், ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் நடந்த நிலச்சரிவிலும் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தது.

இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வீடுகளுடன் மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மீட்பு பணியில், 200-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை மண்ணுக்குள் புதைந்து 26 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மூணாறு நிலச்சரிவில் தமிழக தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யத் தயாராக உள்ளதாக கேரள மாநில முதல்வருக்கு உறுதியளித்ததாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

munnar landslide tn cm call to kerala cm


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->