டயர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்த பேருந்து - பயணிகள் நிலை என்ன?
Mumbai pune expressway bus burst
மும்பை-பூனே விரைவு சாலையில் தனியார் பேருந்து ஒன்று 35 பயணிகளை ஏற்றுக்கொண்டு பூனே நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இன்று காலை சுமார் 7 மணி அளவில் ஆதே கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
இதனால் பயணிகள் அலறி அடித்து உடனடியாக பேருந்தில் இறங்கி ஓடினர். பின்னர் சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. தக்க சமயத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் வெளியேறியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் மும்பை - பூனே விரைவு சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
Mumbai pune expressway bus burst