#Breaking : வட இந்தியாவின் சக்தி வாய்ந்த அரசியல் சாம்ராஜ்யம் முலாயம் சிங் யாதவ் காலமானார்!
Mulayam Singh Yadav was passed away
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் மூன்று முறை உ.பி முதல்வராக இருந்தவர்!
உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாய் சிங் யாதவ் இன்று காலை காலமானதால் உத்தரப்பிரதேச மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் ஆவார். இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெரிய தலைவர். உத்தரப் பிரதேச முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். 1989 முதல் 91 வரை, பின்னர் 1993 முதல் 95 வரை, பிறகு 2003 முதல் 2007 வரை அவர் முதல்வராக இருந்துள்ளார். முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ். தற்போது அசம்கர் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக 1996 முதல் 1998 வரை இருந்துள்ளார். உ.பி சட்டசபைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி கண்டவர் முலாயம் சிங். உபியில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வருபவர். தற்போது ஆறாவது முறையா அவர் லோக்சபா எம்.பியாக பதவி வகித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியாக வந்த நிலையில் தனது 83 வது வயதில் இன்று காலமானார்.
வட இந்தியாவில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வலம் வந்தவர். இவர் இந்தியாவில் பலம் வாய்ந்த அரசியல்வாதியாக பார்க்கப்பட்டவர். இவருடைய மறைவையொட்டி அரசியல் கட்சியினர் பலத்துறை பிரபலங்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Mulayam Singh Yadav was passed away