உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல்நிலை பின்னடைவு..! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து, அவர் உடனடியாக அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதனால் டாக்டர்கள் முலாயம் சிங் யாதவை ஐசியூ வார்டுக்கு மாற்றி அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 

தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், "கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வெளியே வந்து குவிந்து விடவேண்டாம் என்றும், அவர் முழு அளவில் குணமடைந்த பின்னர் அவரை பார்க்கலாம்" என்றும் அக்கட்சி தெரிவித்து உள்ளது. 

முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் தனது மனைவியுடன் அவசரமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mulayam sing yadav health issue


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->