கார் மீது விழுந்த விளம்பர பலகை..! தாய்-மகள் உயிரிழந்த சோகம்...!
Mother daughter killed after billboard falls on car in Lucknow
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பலத்த காற்றினால் கார் மீது விளம்பர பலகை விழுந்ததில் தாய்-மகள் உயிரிழந்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் காஜிபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள இந்திரா நகர் காலனியில் வசிப்பவர் பிரீத்தி ஜக்கி (38). இவரது மகள் ஏஞ்சல் (15). இவர்கள் இரண்டு பேரும் நேற்று மாலை டிரைவர் சர்தாஜ் (28) உடன் மாலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லக்னோ சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் கேட் முன்பாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை ஒன்று பலத்த காற்று காரணமாக இவர்கள் சென்ற கார் மீது விழுந்தது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், காரில் இருந்த தாய்-மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கார் ஓட்டுநர் காயமடைந்தார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்த ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த தாய் மகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Mother daughter killed after billboard falls on car in Lucknow