மகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண், வெளியான சிசிடிவி காட்சிகள்..!
Mother Attempted Suicide after killing his daughter
பெற்ற மகளை நான்காவது மாடியில் இருந்து வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூரு எஸ்ஆர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல் மருத்துவர் ஒருவர் தனது கணவர் மற்றும் நான்கு வயது செவி திறன் குறைப்பாடு உடைய மகளுடன் வசித்து வருகிறார். அந்த சிறுமிக்கு செவித்திறன் மற்றும் பேச்சு குறைப்பாடு இருந்து வந்ததால் அவரது தாயார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த பெண் தனது மகளை நான்காவது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார். பின்னர், அவரும் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அதற்குள் அவரை அக்கம்பக்கதினர் அவரை மீட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டனர்.
இந்நிலையில், அவரது மனநலம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்தான சிசிடிவிகாட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
English Summary
Mother Attempted Suicide after killing his daughter