இளையராஜா இசையுடன் காசி தமிழ் சங்கமத்தை இன்று துவக்கி வைக்கிறார் மோடி! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை காசியில் பல்வேறு துறை அமைச்சர்களாலும் அதிகாரிகளாலும் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து 12 பிரிவுகளில் 2500 பேர் காசிக்கு 8 நாள் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இன்று நடைபெறும் துவக்க விழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியுடன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்கள் சந்திப்பில் "தமிழகத்தைச் சேர்ந்த புரட்சிக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் சிறிது காலம் காசியில் வசித்துள்ளார். அவர் இங்கு வசித்த போது தான் ஆன்மீகத்தின் மீதும் தேசத்தின் மீதும் அவருக்கு ஈர்ப்பு உண்டானது. காசி அனுமன் கட் எனும் இடத்தில் அவர் வசித்த வீடு இன்றைக்கும் கற்றல் மற்றும் புனித தளமாக வழிபட்டு வருகின்றனர்" என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi inaugurates Kashi Tamil Sangamam today with Ilayaraja music


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->