வெள்ளை அறிக்கை இல்லை... ''பொய்'' அறிக்கை: ப.சிதம்பரம் பரபரப்பு குற்றசாட்டு!
modi government released false report
மோடி அரசு செய்த பாவங்களை பூசி மெழுக வெள்ளை பொய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய நிதி மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது, மத்திய அரசு வெளியிட்டுள்ளது வெள்ளை அறிக்கை இல்லை. வெள்ளை பொய் அறிக்கை. இதை எழுதியவர்கள் கூட அது நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டது என ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
தற்போதைய அரசின் வாக்குறுதி மீறல்கள், முந்தைய அரசை குற்றம் சாட்டவும், மாபெரும் தோல்விகள் ஏழைகளுக்கு செய்த துரோகம் போன்றவற்றை மறைக்கவும் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கை தான் இந்த வெள்ளை அறிக்கை.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்த பாவங்கள் மற்றும் தவறுகளை இந்த அறிக்கை மறைக்கிறது. நியாயமான ஆராய்ச்சியாக இருந்தால் 2004 தொடங்கி 2014ஆம் ஆண்டுடன் முடிந்திருக்கக் கூடாது.
இதற்கு சரியான பதில் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ''10 ஆண்டு அநீதிக்காலம்'' அறிக்கை தான் என தெரிவித்துள்ளார்.
English Summary
modi government released false report