கூரியரில் வந்த மிக்ஸி.. வெடித்து சிதறிய சம்பவம்.. கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு..!!
Mixi in courier explodes in Karnataka
கர்நாடக மாநிலத்தை அடுத்த ஹாசன் பகுதியில் உள்ள ஆர்.கேபுரம் நகரில் அமைந்துள்ள சசி என்பவருக்கு சொந்தமான கூரியர் நிறுவனத்திற்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதனை இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நபர் வாங்கிச் சென்று சரியான முகவரிக்கு வரவில்லை என மீண்டும் அதே கடையில் திருப்பி கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று(டிச.26) இரவு 7:30 மணி அளவில் திருப்பிக் கொடுக்கப்பட்ட அந்த பார்சல் வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த சம்பவத்தில் கூரியர் அலுவலகத்தில் இருந்த உரிமையாளர் சசிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் அவரின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹாசன் பகுதி போலீசார் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் குழு ஆதாரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் மங்களூர் ரயில் நிலையம் அருகே குக்கர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்பொழுது மிக்ஸி வெடித்து சிதறிய சம்பவம் கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Mixi in courier explodes in Karnataka