மீண்டும் இரவு நேர ஊரடங்கு.. வெளியாகப்போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக பெங்களூரில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசுக்கு மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவியது. பெங்களூரில் ஒரு மருத்துவர் உள்பட இரண்டு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவருடன் தொடர்பில் இருந்த மேலும் ஐந்து பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த முடிவுக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். 

இதனிடையே பெங்களூரில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 160 ஆக இருந்த நிலையில், 200 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரை செய்யலாம் என மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. விரைவில் இது குறித்து அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may be again night lockdown in bangalore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->