சத்தீஷ்கர்: எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள சிர்கிட்டி தொழில்துறை பகுதியில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது நன்கு கொழுந்து விட்டு எரிந்து மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கியது.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் ஆறு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு கடும் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

மேலும் தொழிற்சாலையில் உள்ள ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் ஆலையின் கொதிகலன் அருகே தீப்பிடித்தால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Massive fire breaks out oil mill in Chhattisgarh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->