திருடன் மீது ஏறி இறங்கிய ட்ராக்டர் - நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருடன் மீது ஏறி இறங்கிய ட்ராக்டர் - நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

குஜராத் மாநிலத்தில் உள்ள மொடாசா என்ற இடத்தில் உள்ள ஒரு டிராக்டர் ஷோரூமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடன் ஒருவன் நுழைந்துள்ளார். அவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை திருடுவதற்காக ஸ்டார்ட் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அவரால் ஸ்டார்ட் செய்ய முயன்றும் முடியவில்லை. 

அதனால், அவர் வண்டியின் பின்புற டயர் அருகில் வந்து கீழே நின்று கொண்டு ஸ்டார்ட் செய்ய முயன்றுள்ளார். அப்போது, டிராக்டர் ஸ்டார்ட் ஆகி தானாகவே நகர்ந்து, கீழே நின்ற அந்த நபர் மீது மோதி, கீழே தள்ளியது. 

அவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியது. ஆனால் அந்த நபர் எதுவும் நடக்காதது போல், டிராக்டரில் ஏறி அமர்ந்து வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் ஷோரூமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த சம்பவக் குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சாலை ஓரம் அனாதையாக நின்று கொண்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், திருடனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man steal tractor in gujarat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->