மனைவி, மகள் என்றும் பாராமல் கணவன் செய்த மோசமான வேலை.. 2வது மகளின் அதிரடி செயல்..!
man shoot his wife and daughter
உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தை சேர்ந்தவர் சேத்திரம். இவர் 41 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சேத்திரம் துப்பாக்கியால் மனைவியையும் அவரது மூத்த மகளையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் மனைவியின் வலது புற புரிவதிலும், மகளின் வயிற்றுப் பகுதியிலும் குண்டு துளைத்து இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இந்த நிலையில், இரண்டாவது மகளை துப்பாக்கியால் சுட முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் சாதுரியமாக தந்தையிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கிய மகள், துப்பாக்கி கொண்டு தந்தையை சுட்டுள்ளார். இதனால் சேத்திரமின் நெஞ்சிலும் வயிற்றிலும் குண்டு துளைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன் பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்து விழுந்து கிடந்த தாயையும், மகளையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த சேத்திரம்மின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் முதற்கட்ட விசாரணையில் தனது மகள் இளைஞன் ஒருவனை காதலிப்பதாகவும், அதில் இவருக்கு சம்மதம் இல்லை என்ற காரணத்தினால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது காரணமாக துப்பாக்கியை கொண்டு மகளையும் மனைவியையும் சுட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டது. ஆனால் சிகிச்சை பெற்று இருக்கும் தாயிடமும், மகளிடமும் விசாரணை நடத்தினால் தான் உண்மை தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
man shoot his wife and daughter