செல்போனை பறித்து விட்டதாக அடித்து கொலை செய்யப்பட்ட நபர்.. டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


செல்போனை திருடியதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி பகுஜன் சாலையில் ஒருவர் மயங்கி கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து  அங்கு சென்ற காவல்துறையினர் அவ்வரை பார்த்த போது உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அவரது முகம் மற்றும் மார்பு பகுதியில் பல காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இருந்தவரை ஒருவர் கொடூரமாக தாக்கியது தெரியவந்தது.

அந்த காட்சிகளின் அடிப்படையில் ஷாஹிப் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது தனது செல்போனை பறித்து சென்றதாக கூறி அவரை அடித்ததாக தெரிவித்தார். அவர் மீது காவல்துறையியர் கொலை வழக்குபதிவு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man murder in Delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->