மும்பையில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து 15 லட்சம் மோசடி - வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அருகே முள்ளுண்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு கௌரவ் தாண்டே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

 இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதால் கௌரவ் தாண்டே அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அந்தப் பெண் கௌரவ் தாண்டேவுடன் நெருக்கமாக பழகி வந்தார்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய கௌரவ் கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த பெண்ணிடம் இருந்து கடனாக ரூபாய் 15 லட்சத்து 75 ஆயிரம் வாங்கியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கௌரவிடம் வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தையும் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் கௌரவ பணத்தை திருப்பி தர மறுத்ததனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கௌரவை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man money fraud to woman in maharastra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->