ஆண் நண்பருடன் இருந்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..!
Man killed His Wife's boy Friend and Committed suicide
மனைவியை அழைத்து லாட்ஜூக்கு அழைத்து சென்ற ஆண் நண்பரை கணவன் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் ரிஷப் சக்சேனா . இவருக்கு திருமணமாகி ரவ்லீன் சாவ்லா என்ற மனைவி இருக்கிறார்.திருமணத்திற்கு முன் ரவ்லீன் சாவ்லாவிற்கு சன்னி ஷெராவத் என்ற ஆண் நண்பருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தொழில் விஷயமாக ரிஷப் சக்சேனா வெளியூருக்கு செல்வதாகவும் திரும்பி வர 15 நாட்கள் ஆகும் எனவும் மனைவியிடம் தெரிவித்துள்ளார். அப்போது சன்னி ஷெராவத்தும், ரவ்லீன் சாவ்லாவும் சினிமா ஹோட்டல் என பல இடங்களுக்கு சுற்றியுள்ளனர். மேலும், மணாலியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர்.
இதனை அறிந்து ஆத்திரமடைந்த அவர் சொகுசு விடுதிக்கு சென்று அவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று அவர்களை சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே சன்னி ஷெராவத் உயிரிழந்தார். இதனையடுத்து, தன்னை தானே அவர் சுட்டு ரிஷப் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த ரவ்லீன் சாவ்லாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man killed His Wife's boy Friend and Committed suicide