தென்காசி || அதிமுக பிரச்சாரத்தில் பங்கேற்ற முதியவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தைத் திருச்சியில் தொடங்கினார். அந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமையில் கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்களையும், ஒரே மேடையில் ஆதரித்து பிரச்சாரம் செய்தார். 

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதாவது, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தை ஆதரித்து, நாகர்கோவில் நாகராஜா கோயில் திடல் அருகே பிரச்சாரம் செய்தார். பின்னர், இரவு 7 மணியளவில் தென்காசி தொகுதியில், கூட்டணி கட்சிகள் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். 

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற நடுவக்குறிச்சியைச் சேர்ந்த வள்ளிநாயகம் என்ற அறுபது வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died in thenkasi admk election campaighn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->