இந்தியாவை 2047க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம் - பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


இந்தியாவை 2047க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம் என  78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார்.

78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 11வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்ததாவது,

தேசத்திற்காக தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நாள். இந்த நாடு அவர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து 40 கோடி மக்கள் ரத்தம் சிந்தி நமக்கு சுதந்திரம் வங்கி கொடுத்துள்ளனர். இன்று இந்தியாவில் 140 கோடி மக்களாக இருக்கின்றோம். நாம் ஒன்றுபட்டால் 2047க்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

ஜீல்  ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளது. நாடு முழுவதும் ஒரு மாவட்ட ஒரு தயாரிப்பு என்ற சூழல் நிலவுகிறது. நாம் ஒன்றுபட்டால் 2047க்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த பாரதமாக உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

make India a developed Bharat by 2047 PM Modi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->