நண்பர்களின் பேச்சை கேட்காமல் குவாரியில் குதித்த வாலிபர்.. அரங்கேறிய பெரும் சோகம்.. கதறும் நண்பர்கள்.!!
Maharashtra young boy died
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வசாய் ராஜவல்லி பகுதியைச் சார்ந்தவர் அபிஜித் வான்கடே. இவர் நேற்று காலை 6 மணி அளவில் தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்.
பின்னர் காலை 8.30 மணி அளவில் கை கால்களை சுத்தம் செய்வதற்காக அங்குள்ள கல் குவாரிகளுக்கு அனைவரும் சென்றனர். அங்கு 50 அடி ஆழமுள்ள மழைநீர் தேங்கி இருந்த குவாரியில், நண்பர்களின் எச்சரிக்கையை மீறி குதித்துள்ளார்.
சில வினாடிகளுக்குப் பின்னர் அவர் தண்ணீரோடு மயமாகவே, அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர். இதன் பின்னர் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடி வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Maharashtra young boy died