முதலாளியின் மனைவி மீது ஆசை.. அடைய முடியாததால் கொடூர கொலை.. காமுகன் கைது.!
Maharashtra Thane Super Market Owned Lady Murder and Sexual abuse Attempt by Worker
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள தானே டோம்பிவேலி பகுதியை சார்ந்தவர், தனது மனைவியுடன் சேர்ந்து சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த கடையில், ரஞ்சன் என்ற 20 வயது வாலிபர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், ரஞ்சனுக்கு முதலாளியின் மனைவி மீது காமுக பார்வை திரும்பவே, அவரை எப்படியாவது பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளான். இதற்கான தருணம் பார்த்து காத்திருந்த நிலயில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடையின் முதலாளி மற்றும் அவரின் மனைவி மது அருந்துவதை அறிந்துள்ளான்.
பின்னர், மற்றொரு பணி காரணமாக கடையின் முதலாளி வெளியே சென்றுவிட்ட நிலையில், முதலாளியின் மனைவி தள்ளாடியபடி இருப்பதை கொண்டுள்ளான். இதனையடுத்து, வீட்டிற்குள் சென்ற காமுகன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி காமுகனின் பிடியில் இருந்து தப்பி, கணவரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துவிடுவேன் என்று கூறியுள்ளார். பயந்துபோன காமுக கொடூரன் அங்கிருந்த கத்தியை எடுத்து முதலாளியின் மனைவியை கொலை செய்து தப்பி சென்றுள்ளான்.
வீட்டிற்கு வந்த கணவர், மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மேற்கூறிய உண்மை அம்பலமாகியுளளது. ரஞ்சனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Maharashtra Thane Super Market Owned Lady Murder and Sexual abuse Attempt by Worker