பெண்ணை கடத்தி பண்ணை வீட்டில் வைத்து 2 நாட்கள் மதுபோதையில் பலாத்காரம் செய்த காமுக மிருகங்கள்..! - Seithipunal
Seithipunal


பண்ணைவீட்டில் பெண்ணை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்த சோகம் அரங்கேறியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹ்ஹத்தோல் கடாக்கட் பகுதியை சார்ந்த அரசியல்வாதி விஜய் திரிபாதி. இவன் தனது நண்பர்களுடன் பண்ணை வீட்டில் விருந்து ஏற்பாடு செய்துள்ளான். கடந்த 18 ஆம் தேதி மற்றும் 19 ஆம் தேதி நடைபெற்ற விருந்தில், அதே பகுதியை சார்ந்த 20 வயது பெண்மணியை கடத்தி வந்துள்ளனர். 

காரில் சென்று பெண்ணை கடத்தி வந்து, பண்ணை வீட்டில் இரண்டு நாட்களாக கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நான்கு காமுகர்களும் மதுபோதையில் பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், பெண்ணிற்கும் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மதுபோதை மயக்கத்திலேயே வைத்துள்ளனர்.

பின்னர் காரில் பெண்ணை ஏற்றிச்சென்று, அவரது வீட்டு வாசலில் பிப்ரவரி 20 ஆம் தேதி காரில் இருந்து தள்ளிவிட்டு சென்ற நிலையில், இந்த விஷயம் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெண்மணியை மருத்துவமனையில் அனுமதி செய்த காவல் துறையினர், காமுகன்களை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh girl Sexual Abuse 2 Days Police Investigation 22 Feb 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->