காதல் திருமணம் செய்த தம்பதி.! ஒன்றாக சேர்ந்து தூக்கில் தொங்கிய சோகம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் டவுன் பகுதியில் வசித்து வந்தவர் திப்பண்ணா ஒசமணி (34). இவரது மனைவி சுஜாதா (30). இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் ஏ.பி.எம்.சி அருகே வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்த நிலையில் தற்போது சுஜாதா 7 மாத கற்பனையாக இருந்துள்ளார். இதையடுத்து நேற்று காலை திப்பண்ணா வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது திப்பண்ணாவும், சுஜாதாவும் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து முதோல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணவன் மனைவி இரண்டு பேரையும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் போலீசார், காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உடன் வீட்டில் சேர்க்காமல் இருந்ததால் கணவன் மனைவி தற்கொலை செய்து இருக்கலாம்? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Love married couple suicide in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->