காதலர்களை பலிவாங்கிய கொரோனா.! ஒரே நேரத்தில் இருவரும் தூக்கிட்ட சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால், பலரும் நிதி நெருக்கடியால் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இது போல கேரளாவில் இரண்டு காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் ஆலப்புழாவில் காதல் ஜோடி ஒன்று தனியே வாழ்ந்து வந்துள்ளது. இவர்கள் இருவரும் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். கணவர் பெயிண்டிங் வேலை செய்பவர் இந்த நிலையில், அந்தப் பெண்ணிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் மனமுடைந்து மிகவும் சோகமாக காட்சி அளித்துள்ளார். 

கணவர் வேலைக்கு சென்ற பின்னர் தேவிகா என்ற அந்த பெண் தன்னுடைய வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலைக்கு சென்று திரும்ப கணவர் தனது காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதை பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி என்ன செய்வது என்று தெரியாமல், அவரது பிரிவை தாங்கிக் கொள்ளாமல் இயலாமல் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்துள்ளார். 

அவருடைய பெயிண்டிங் காண்ட்ராக்டர் வீடு தேடி வந்த பொழுது கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட விஷயம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இது தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Love couples suicide in Kerala 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->