வரும் 7ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்.. அறிவிப்பை வெளியிட அரசு.!!
lockdown in mumbai
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 961 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தலைநகர் டெல்லியில் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி - 263, மகாராஷ்டிரா - 252, குஜராத் - 97, கேரளா - 65, தெலங்கானா - 62, ராஜஸ்தான் - 69, கர்நாடகா - 34, தமிழ்நாடு - 45, அரியானா - 12, மேற்கு வங்கம் - 11, மத்திய பிரதேசம் - 9, ஒடிசா - 9, ஆந்திரா - 16, உத்தரகாண்ட் - 4, சண்டிகர் - 3, காஷ்மீர் - 3, உத்தரபிரதேசம் - 2, கோவா, இமாச்சல பிரதேசம், லடாக், பஞ்சாப், மணிப்பூரில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒமைக்ரான் பரவல் காரணமாக, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. ஒமைக்ரான் பரவல் காரணமாக கேரளா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் காரணமாக, மும்பையில் வரும் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. மும்பையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.