திருப்பதியில் 6 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது.!!
Leopard caught killing 6 year old girl in Tirupati
கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர்கள் திருமலையில் தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் இருந்து நடைபாதை வழியாக சென்று கொண்டிருந்தபோது லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை இரவு 8 மணி அளவில் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே சென்று கொண்டிருக்கும்போது திடீரென வந்த சிறுத்தை ஒன்று சிறுமி லக்ஷிதாவை தாக்கி புதறுக்குள் இழுத்துச் சென்றது.
இதை கண்ட பெற்றோரும் சக பக்தர்களும் சிறுத்தையை பின்தொடர்ந்து துரத்தினர். மேலும் இது குறித்து வனத்துறை மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டை நடத்தியும் கண்டுபிடிக்க முடியாததால் மறுநாள் காலை லட்சுமி நரசிம்மர் கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் சிறுமி லக்ஷிதா உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்ட வனத்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று கடந்த மாதமும் இதேபோன்று சிறுவன் ஒருவனை சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்ற போது பெற்றோர்கள் பின் தொடர்ந்து விரட்டியதால் புதருக்குள் சிறுவனை விட்டு விட்டு தப்பி சென்றது.
இந்த நிலையில் இன்று முதல் 15 வயதுக்கு உட்பட்டோர் நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்ல அனுமதி இல்லை எனவும், இரு சக்கர வாகனத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் திருமலை தேவஸ்தானம் நேற்று அறிவித்தது.
மேலும் நடைபாதையில் உலா வரும் சிறுத்தை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி சிறுவர்களை குறி வைத்து தாக்கும் சிறுத்தையை பிடிக்க வனப்பகுதிகளில் கூண்டு அமைக்கப்பட்டது. திருப்பதி மலை பாதையில் நடை பயணம் செல்லும் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் பொதுமக்களும் திருப்பதி செல்லும் பக்தர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
English Summary
Leopard caught killing 6 year old girl in Tirupati