அருணாச்சல பிரதேசம்! நிலச்சரிவில் தரைமட்டமான வீட்டில் சிக்கி இருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் தரைமட்டமான வீட்டில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இடாநகர் பஞ்சாபி தாபா அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதில் தகரக் கூரையுடன் கூடிய மூங்கில் வீடு தரைமட்டமானது. இதில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.

மேலும் ஒருவர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதால் அவரை மீட்கும் பணியில் நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் இடார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, நகர்லகுனில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் பந்தர்தேவாவில் உள்ள நிகும் நியா ஹால் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Landslide in Arunachal Pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->