வசதியாக வாழ ஆசைப்பட்டு 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த கூலித் தொழிலாளிகள்.!
Laborers killed a 6-year-old boy to live rich
வசதியாக வாழ ஆசைப்பட்டு 6 வயது சிறுவனை கழுத்தை அறுத்து நரபலி கொடுத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புது டெல்லியில் லோடி காலனி பகுதியில் சிறு குடிசைகள் அமைத்து கட்டிட தொழிலாளிகள் வசித்து வருகின்றனர். அந்த கட்டிட தொழிலாளிகளுடன் 6 வயது சிறுவனின் பெற்றோரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த குடிசை பகுதியில் நேற்று இரவு 10:30 மணி அளவில் சில பெண்கள் மர்ம பூஜை நடத்தியுள்ளனர். இந்த பூஜையில் அந்த சிறுவனும் கலந்து கொண்டுள்ளான். பூஜை முடிந்ததும் அந்த பெண்கள் வெளியேறிய நிலையில் சிறுவன் மட்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து பெற்றோர் சிறுவனை தேடியுள்ளனர் ஆனால் அவன் எங்கும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் குடிசை பகுதியில் சென்று பார்த்துள்ளனர். தனது மகன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் குடியிருப்பு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்த பீகாரரை சேர்ந்த விஜயகுமார் மற்றும் அமீர் குமார் ஆகிய இரண்டு பேரை விசாரித்தனர். இந்த விசாரணையில் சிறுவனின் தலையில் அடித்தும் கழுத்தை அறுத்தும் நரபலி கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Laborers killed a 6-year-old boy to live rich