கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடக்கம் - இந்திய வானிலை ஆய்வு மையம்.!!
Kerala South West Monsoon Starts Earlier 21 May 2021
கேரளாவில் வருடம்தோறும் வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த வருடத்திற்கான பருவமழை மே மாதம் இறுதியில் தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 24 ஆம் தேதியில் இருந்து மே 31 ஆம் தேஹத்திகுள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் எனவும், இதனால் தென் மாநிலங்களில் இயல்பான அளவு மழைப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைபெய்ய தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டத்திலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் யாஷ் என்ற புயலும் உருவாகியுள்ளது.
யாஷ் புயல் வரும் 26 ஆம் தேதி மாலையில் மேற்கு வங்கம் - ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மீனவர்கள் கரைக்கு திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kerala South West Monsoon Starts Earlier 21 May 2021