கேரள மக்களே உஷார்... இன்னும் 5 நாட்களுக்கு கனமழை!
Kerala next 5 days heavy rain warns
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோழிக்கோடு, எர்ணாகுளம், கண்ணூர், காசர்மேடு போன்ற மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும் எனவும் தேசிய கடல் சார் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வருகின்ற 5 ஆம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் மீன் பிடிக்க சொல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Kerala next 5 days heavy rain warns