செய்தித்தாளை வைத்து மாஸ் காட்டிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரளா மாநிலத்தை சார்ந்த சிறுவன் அத்வைத் கிருஷ்ணா. கிருஷ்ணா திரிசூரில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு இளம் வயதில் இருந்தே இரயில் மீது அலாதியான ஆர்வம் இருந்து வந்துள்ளது. இந்த ஆர்வத்தை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் நிலையில், இதனை பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்த சிறுவன், செய்தித்தாள் மூலமாக நீராவி இரயில் எஞ்சின் மற்றும் பெட்டிகளை தயார் செய்துள்ளான். 

இதன் தோற்றம் தத்ரூபமாக நீராவி இரயில் போலவே உள்ள நிலையில், சிறுவனின் செயலை மத்திய இரயில்வே அமைச்சகம் பாராட்டியுள்ளது. மேலும், சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து, வீட்டில் இருக்கும் சிறுவனின் பயனுள்ள படைப்பு என்று பகிர்ந்துள்ளது. 

இது குறித்து சிறுவன் தெரிவிக்கையில், இந்த இரயிலை உருவாக்க மூன்று நாட்கள் தேவைப்பட்டது என்றும், 33 செய்தித்தாள்கள் இந்த இரயில் எஞ்சின் மற்றும் பெட்டிகளை உருவாக்க தேவைப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala child boy make Train using News Paper


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->